புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2013

சினிமா ஆசை காட்டி ஆந்திர சிறுமியை
திருச்சியில் கற்பழித்த 5 பேர் கைது

ஆந்திர மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் அமீர் பேட் பகுதியில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் மலர் (வயது
17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள விடுதியில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். அப்போது உடன் தங்கியிருந்த ஆஷா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. தன்னுடன் சேலத்திற்கு வந்தால் அதிக சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.


இதை நம்பிய மலர் கடந்த 28-ந்தேதி காலையில் ஆஷாவுடன் சேலம் வந்தார். பின்னர் அன்று இரவு 9 மணி அளவில் மலரை 3 வாலிபர்களிடம் அறிமுகப்படுத்திய ஆஷா அவர்கள் நல்ல வேலை வாங்கி தருவார்கள் என்றும் அவர்கள் சொல்லும் படி நடந்து கொள் என்றும் கூறி அனுப்பி வைத்தார். இதைதொடர்ந்து அந்த 3 பேரும் மலரை காரில் அழைத்துக்கொண்டு திருச்சி வந்தனர். வழியிலேயே காரில் வைத்து 3 பேரும் மலரிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் திருச்சி கருமண்டபம் நியூசெல்வநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து 3 பேரும் மலரை பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து மலர், தான் ஏமாற்றப்பட்டு விபசாரத்தில் தள்ளப்பட்டதை உணர்ந்தார். இதனால் மன வேதனை அடைந்த அவர் அங்கிருந்து சுவர் ஏறி குதித்து தப்பினார். பின்னர் அந்த சிறுமியை பார்த்த பொதுமக்கள் கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் ஆஷா, மலரிடம் நீ அழகாக இருப்பதால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியதால் அவருடன் கடந்த 28-ந்தேதி ஆந்திராவில் இருந்து சேலத்திற்கு வந்ததாகவும், அங்கு பிரபு என்பவரை டைரக்டர் என்று அறிமுகப்படுத்தி அவர்களுடன் காரில் ஏற்றி அனுப்பி வைத்ததாகவும் கூறினார். அவர்கள் காரில் வரும் போதே மலரிடம் சில்மிஷம் செய்துள்ளனர்.
மலரிடம் ஆஷா பேசிய செல்போன் எண்ணை வைத்து அவர் பதுங்கியிருந்த பாபநாசத்திற்கு சென்று போலீசார் கைது செய்தனர்.
அதன் பின்னர் ஆஷாவை அழைத்து கொண்டு வந்த போலீசார் நியூசெல்வா நகரில் வீட்டில் மறைந்திருந்த வாழப்பாடி பெருமாள்புரத்தை சேர்ந்த கவிதா (20), திருப்பூர் அங்கேரிபாளையம் கோகுலம் தெருவை சேர்ந்த பிரபு (31), சேலம் வலையப்பட்டி பெருமாள் பாளையம் சக்திவேல் (34), மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த முகமது சபீதுல் (30) ஆகியோரை இன்று கைது செய்தனர். மேலும் அவர்கள் இதுபோல் வேறு யாரையெல்லாம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி உள்ளனர் என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ad

ad