புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2013

,

வேட்புமனுத் தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டதும் இராணுவத்தினரை முகாம்களில் முடக்க வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

வடமாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் திகதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து வடக்கிலுள்ள இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்க வேண்டுமென தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தைக் கேட்டுள்ளது. நேற்று ராஜகிரியவிலுள்ள தேர்தல் செயலகத்தில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்ததாவது,
தேர்தல் ஆணையாளருடனான சந்திப்பின்போது நாம் பல விடயங்களை அவரது கவனத்துக்குக் கொண்டு வந்தோம். வட மாகாண சபைத் தேர்தல் காலத்தில் வடக்கில் இடம்பெறக் கூடிய இராணுவத்தினரின் தலையீடுகள் தொடர்பில் அவரிடம் தெளிவுபடுத்தினோம். அங்கு நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் சிவில் நிர்வாகத்தில் தலையீடு செய்வது போன்று தேர்தல் காலத்தில் தேர்தல் நடவடிக்கைகளிலும் தலையிடும் நிலை தோன்றியுள்ளது. ஆகவே, தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரும் திகதி அறிவிக்கப்பட்டவுடன் வடபுலத்தில் செற்படும் இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்க வேண்டும்.
தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் சார்க் வலய மற்றும் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் மற்றும் உள்ளுர் தேர்தல் கண்காணிப்பாளர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படல் அவசியம் போன்ற விடயங்களை நாம் தேர்தல் ஆணையாளரிடம் வலியுறுத்தினோம்.
நான்கு வருடங்களுக்கு முன்பதாக நடத்தப்பட வேண்டிய வட மாகாண சபை தேர்தலை தற்போது ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இத்தேர்தலானது எந்தளவிற்கு நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலாக அமையும் என்பது சந்தேகமாகவேயுள்ளது.
ஏனெனில், வடக்கில் இன்னும் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்படவில்லை. அதேபோன்று தேர்-தலுக்காக இராணுவத்தினர் வேட்பாளர் தெரிவு மற்றும் பிரசார நடவடிக்கைகள் என்பவற்-றிலும் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடக்கில் ஜனநாயக ரீதியாக தேர்தல் நடைபெறும் என்று கூற இயலாது.
அரசியல் கட்சிகளுக்கு சுதந்திரமாக செயற்படக்கூடிய சூழல் வடக்கில் இல்லை.
மறுபுறம் 13வது திருத்தச் சட்டத்தை முழு அளவில் ஒடுக்கும் செயற்பாட்டிலேயே அரசும் உள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோன்று வடக்கில் நடமாடும் இராணுவத்தை முழு அளவில் முகாம்களுக்குள் தேர்தல் காலத்தில் முடக்க வேண்டும்.
அத்துடன் சர்வதேச கண்காணிப்பாளர்களை தேர்தல் முடியும் வரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
இவற்றை தேர்தல் செயலகம் கவனத்திற் கொள்ள வேண்டும் .
அத்துடன் இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பில் பங்கு கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் கேட்டறிந்து கொண்டோம். இதன்போது அவர், இடம்பெயர்ந்தோர் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்தமை, அவ்வாறான விண்ணப்பங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டவற்றின் எண்ணிக்கை, நிராகரிப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை போன்றனவற்றை எமக்குத் தெரிவித்தார். அத்துடன் நிராகரிப்பட்ட விண்ணப்பதாரிகள் எதிர்வரும் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் இது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ad

ad