புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2014

நிறைய பக்கங்கள், நிறைய விஷயங்கள்! பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஜெயலலிதா பேட்டி!
பாராளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை 25.02.2014 செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்சிசியில் தேர்தல் அறிக்கையின் தமிழ் பிரதியை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். ஆங்கிப் பிரதியை விசாலாட்சி நெடுஞ்செழியன் பெற்றுக்கொண்டார். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையில் நிறைய பக்கங்கள், நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதிமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் உள்ளன. ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளன. தமிழக வளர்ச்சிக்கான திட்டங்களும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன என்றார்.
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 40 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களை தனது பிறந்தநாளான 24.02.2014 திங்கள்கிழமை ஜெயலலதா அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். 

ad

ad