புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2014


இத்தாலி நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மட்டெயோ ரென்ஷி, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளார்.
இத்தாலி நாட்டின் இளம் பிரதமராக கடந்த சனிக்கிழமை அவர் பொறுப்பேற்றார். அவருடன், புதுமுக அமைச்சர்கள் பலர்
பொறுப்பேற்றுக் கொண்டனர். இதற்கு முன்னர் ஆட்சி செய்த மூன்று பிரதமர்களின் அரசு தோல்வியடைந்தது குறித்து விவாதம் நடந்ததைடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இத்தாலி செனட் சபையில் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ரென்ஷிக்கு ஆதரவாக 169 உறுப்பினர்களும், எதிராக 139 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற ரென்ஷி, பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இத்தாலியை மீட்டெடுப்பேன் என்று உறுதியளித்தார். பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வரி விதிப்பு, நிர்வாகம் ஆகியவற்றில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும், வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ad

ad