புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2015

ஐந்து வருடங்களின் பின்னர் சொந்த மாவட்டங்களுக்கு ஓடும் எம்.பி.மார்

சுதந்திரக் கட்சி பிரமுகர் கந்தசாமி கருணாகரன் கிண்டல்
கடந்த பாராளுமன்றத் தேர்தல் முடிந்து ஐந்து வருடங்களின் பின்னர் கடந்த ஐந்தாறு வாரங்களாக பல தமிழ் எம்.பி. மாரை தற்போதுதான் அவர்கள் வெற்றி பெற்ற சொந்தத் தொகுதிகளில் காணக்கூடியதாக உள்ளது.
பாராளுமன்றம் கலைப்பு மற்றும் தேர்தல் அறிவிப்பு பற்றிய
செய்திகள் வெளியாகியுள்ள மையினாலேயே இவர்கள் தமது தொகுதிகளுக்கு ஓடிச் சென்று மக்களை சுகம் விசாரித்து வருவதாக சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட தமிழ் விவகார இணைப்பாளர் கந்தசாமி கருணாகரன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இந்த நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்த அவர், மக்கள் தமக்குச் சேவை செய்யக் கூடியவர்களை இனியாவது தெரிவு செய்ய வேண்டும். ஒருமுறை ஏமாறும் மக்கள் அடுத்த தடவையும் அதே உறுப்பினரிடம் ஏமாறாது தம்மைத் திருத்திக் கொள்ள முயல வேண்டும் என்றார்.

ad

ad