புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2015

முதல் சோலார் விமானநிலைய பெருமையை பெறுகிறது கொச்சி சர்வதேச விமான நிலையம்!

முழுக்க முழுக்க சூரிய சக்தியால் இயங்கப் போகும் நாட்டின் முதல் விமான நிலையம் என்கிற பெருமையை அடைகிறது கொச்சி சர்வதேச விமான நிலையம்.

முதல் கட்டமாக கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம், வருகை டெர்மினலின் மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்தி 100 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையத்தை நிறுவியது கொச்சி சர்வதேச விமான நிலையம் CIAL (Cochin International Airport Limited). அதன் வெற்றிகரமான செயல்பாட்டைத் தொடர்ந்து, பின்னர் ஒரு மெகா வாட் திறனாக மெருகேற்றப்பட்டது.

இதற்கான பேனல்களை விமான நிலைய கூரையிலும் தரையிலும் பொருத்தி இருந்தார்கள். இது கேரள மாநிலத்தில் ஒரு 'ட்ரெண்ட் செட்டராக' ஆனது. CIALஐ தொடர்ந்து தற்போது பல்வேறு துறையினரும், சூரிய சக்தியை பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

ad

ad