புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2016

கொழும்பில் சேரிப்புறங்களில் குடியிருப்போருக்கு 13 ஆயிரம் வீடுகள்: நகர அபிவிருத்தி அதிகாரசபை


கொழும்பின் சேரிப்புறங்களில் குடியிருப்போருக்கு 13 ஆயிரம் வீடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபை ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொழும்பின் சேரிப்புறங்களில் வாழும் வசதி குறைந்த மக்களுக்கு ஐநூறு சதுர அடியில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.
சுமார் 13 ஆயிரம் குடும்பங்கள் இதன் மூலம் பயனடையவுள்ளன.
தற்போதைக்கு சேரிப்புற குடியிருப்புகள் காரணமாக நகரின் அழகு கெடுவதுடன், வர்த்தக ரீதியில் பெறுமதியான அரச காணிகள் அநியாயமாக முடக்கப்பட்டுள்ளன.
எனவே, சேரிப்புறங்களில் குடியிருப்போரை அங்கிருந்து அகற்றி அவர்களுக்கு தொடர்மாடி வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான காணிகளை பெற்றுக் கொள்வதும் இலகுவாக இருக்கும் என்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ad

ad