புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2016

அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் - இரா.சம்பந்தன்

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பயங்கரவாத  தடைச் சட்டத்தை நீக்கவும் நடவடிக்கை வேண்டும் என நல்லாட்சி அரசாங்கத்தை எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான  இரா.சம்பந்தன் வேண்டுகொள் விடுத்துள்ளார்.
அத்துடன், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம், அதிகாரத்துக்கு வந்ததில் இருந்து துரிதமாக செயற்படவில்லை எனவும் சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் 11 ஆயிரம்  கைதிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன்;, இந்த அரசாங்கம் பெறுப்பேற்று 18 அல்லது அதற்கும் அதிக மாதங்கள் ஆகின்ற போதும்  எதிர்பார்த்த துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ad

ad