புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2016

முன்னாள் போராளிகளுக்கு சிறப்புப் பரிசோதனை

முன்னாள் போராளிகளுக்குத் தேவையான அடிப்படை மற்றும் சிறப்புப் பரிசோதனைகள் ஆய்வுகள் என்பன வடக்கின் ஒவ்வொரு
மாவட்டத்திலும் உள்ள பொது வைத்தியசாலைகளிலும், தெரிவுசெய்யப்பட்ட ஆதார வைத்தியசாலைகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதனைச் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.
‘இவ்வாறு அறிவித்த வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, அனுப்பிவைக்கப்பட்ட செய்திக் குறிப்பிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
‘புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளின் ஆரோக்கியம் தொடர்பில் எழுந்திருக்கும் அக்கறைகளையும் கரிசனைகளையும் கருத்திற்கொண்டு, அவர்களுக்கான சிறப்புமருத்துவக் கவனிப்பு நடைமுறையொன்றை வடக்கு மாகாண சுகாதார அமைச்சுமுன்னெடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார அமைச்சில் சுகாதார அமைச்சர்மருத்துவர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சிறப்புக்கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டனர்.
சிறப்பு மருத்துவக் கவனிப்பானது வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள பொது வைத்தியசாலைகளிலும் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட ஆதார வைத்தியசாலைகளிலும் இடம்பெறவுள்ளது.
அத்துடன் இந்தச் சேவையானது சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த நடைமுறையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்குத் தேவையான அடிப்படையானமற்றும் சிறப்பான பரிசோதனைகளும் ஆய்வுகளும் இடம்பெறவுள்ளன.
அத்துடன் அவர்களின் நீண்டகால சுகநலம் தொடர்பாக தொடர் அவதானிப்பும் பராமரிப்பும் வழங்கப்படவுள்ளது.
இந்தச் சிறப்பு மருத்துவக் கவனிப்பு நடைமுறைகள் தொடங்கும் திகதியும், அந்த நடவடிக்கைகள் இடம்பெறும் வைத்தியசாலைகள் பற்றிய விபரமும் விரைவில்அறிவிக்கப்படும்.
இதுபற்றிய மேலதிக தகவல் பெற விரும்புவர்கள் வடக்கு மாகாண சுகாதார சேவைகள்பணிப்பாளரைத் தொடர்புகொள்ள வேண்டும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad