புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2019

மைத்திரி- மஹிந்த சதியே காரணம்

புதிய அரசியல் அமைப்பு தடைப்பட்டுப் போனதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பிரதான காரணம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு தடைப்பட்டுப் போனதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பிரதான காரணம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியல் அமைப்பு தடைகள் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கில் முன்வைத்த கருத்துக்கள் குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.

மைத்திரி-மஹிந்த கூட்டணியின் சதித்திட்டம் மூலமாகவே பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பல இழக்கப்பட்டு புதிய அரசமைப்பு நிறைவேறும் சந்தர்ப்பம் இல்லாது போனது. தேர்தல் காலங்களில் மாத்திரம் பிரதான கட்சிகளின் தேர்தல் வெற்றிக்காக தமிழ் மக்களை நாடுவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் மேலும் கூறினார்.

ad

ad