மஹிந்த ராஜபக்ச பாவம் பார்த்து விட்டதாலேயே தமிழர்கள் இப்பொழுது இந்த துள்ளுதுள்ளுகிறார்கள். புலிகள் அழிந்த போதே
கூட்டமைப்பையும் .இல்லாமல் செய்திருக்க வேண்டும் என தெரிவி்த்துள்ளார் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர.அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக அவர்கள் சத்தியம் செய்துள்ளனர். நம் நாட்டில் கூட்டாட்சி முறையை அறிமுகப்படுத்த அவர்கள் மற்ற நாடுகளுடன் கலந்துரையாடினால், அது அவர்கள் எடுத்த சத்தியத்திற்கு முற்றிலும் எதிரானது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு ‘தவறு’ செய்துள்ளார் என்று நினைக்கிறேன்.
இந்த தமிழ் அரசியல்வாதிகள் மீது அவருக்கு மிகுந்த அனுதாபம் இருந்தது. ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டபோது அவரது நாஜி அரசியல் கட்சி அழிக்கப்பட்டது. போல்போட் கொல்லப்பட்டபோது அவரது கெமர் ரூஜ் அரசியல் கட்சி ஆவியாகிவிட்டது.
சதாம் {ஹசைன் கொல்லப்பட்டபோது அவரது பாத் அரசியல் கட்சி அழிக்கப்பட்டது. ஹொஸ்னி முபாரக் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது, அவரது தேசிய ஜனநாயகக் கட்சி தடைசெய்யப்பட்டது.