புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2021

கனடா வரும் பயணிகள் 3 நாட்கள் ஹோட்டலில் தனிமை! - சொந்த செலவில் சோதனை.

www.pungudutivuswiss.com
கனடாவிற்கு வரும் பயணிகள் ஹோட்டல்களில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன் பின் அவர்கள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.


கனடாவிற்கு வரும் பயணிகள் ஹோட்டல்களில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன் பின் அவர்கள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

புதிய வகை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அப்போது, கனடாவிற்கு வரும் பயணிகள் மூன்று நாட்கள் வரை ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும், அவர்கள் கடுமையான மேற்பார்வையின் கீழ் இருப்பர். அதன் பின் அவர்கள் கொரோனா பரிசோதனையை தங்கள் சொந்த செலவில் செய்ய வேண்டும். சோதனையின் போது எதிர்மறையாக வந்தால், அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அடுத்த 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

அப்படி நேர்மறையான முடிவு வந்தால், அவர்கள் அரசாங்கம் தனிமைப்படுத்தும் இடத்திற்கு மாற்றப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கொரோனா பரிசோதனைக்கு 1600 அமெரிக்க டொலர் செலவாகும் என்று கூறப்படுகிறது.

மேலும், கனேடிய விமான நிறுவனங்கள் வரும் ஏப்ரல் இறுதி வரை ரத்து செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாகவும், மக்கள் பறக்க வேண்டிய நேரம் இது கிடையாது என்றும் ட்ரூடோ கூறியுள்ளார்.

கனேடியர்கள் மீது பொது சுகாதார அதிகாரிகள் கொண்டுள்ள அக்கறை காரணமாக இந்த கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம், கனடாவுக்கு உள்வரும் அனைத்து விமானங்களும் மொன்ட்ரியல் , ரொறன்ரோ, கல்கரி மற்றும் வான்கூவர் ஆகிய நான்கு விமான நிலையங்களில் ஒன்றில் தரையிறக்கப்படும்.

அப்படி தரையிறக்கப்படும் போது, வரும் பயணிகள் கட்டாய பி.சி.ஆர் சோதனை, அதாவது கொரோனா பரிசோதனை, அவர்கள் சொந்த செலவில் செய்ய வேண்டும்.

ad

ad