ஐ.நா.மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் கடைசி நிமிட பேச்சுவார்த்தையில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்சேல் பச்லெட், வெளியிட்டுள்ள மோசமான அறிக்கை குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
“நாங்கள் மனித உரிமைகளுக்கான ஆணையாளரின் அலுவலகத்துடன் சில விவாதங்களை நடத்தி வருகிறோம். மேலும் அவர் எழுப்பிய விடயங்களில் ஒருவித உடன்பாட்டை எட்ட முயற்சிக்கிறோம். அந்தவகையில் இவ்விடயங்களில் முறையான பதிலை நாங்கள் நிச்சயம் வெளியிடுவோம்” எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.