ஒன்ராறியோ நிதி அமைச்சர் றொட் பிலிப்ஸ் பதவி விலகியுள்ளதை அடுத்து, வெளிநாட்டுக்கு சுற்றலா சென்றுள்ள பல கனடிய அரசியல் பிரமுகர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கனடாவில் கொரோனா நெருகக்கடிடி தீவிரமடைந்துள்ள நிலையில், ஒன்ராறியொ நிதியமைச்சர் றொட் பிலிப்ஸ் கரிபியன் தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த விடயம் அம்பலமானதை அடுத்து நேற்று முன்தினம் பதவி விலகினார்.
இந்த நிலையில் கியூபெக், அல்பேட்டா, சஸ்கட்சிவான், மனிடோபா ஆகிய பிராந்தியங்களில் அரசியல் வாதிகள் பலர் வெளிநாடுகளுக்கு விடுமுறைப் பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன