பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் மற்றும், அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோருக்கான 72 மணித்தியால தடுப்புக்காவல் முடிவடைந்ததும், 90 நாள்கள் தடுப்பு உத்தரவொன்றைப் பெற விசாரணையாளர்கள் எதிர்பார்ப்பதாக, பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், சம்பவத்தை விசாரணை செய்யும் அதிகாரியாலேயே இறுதி முடிவு எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்