புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2022

கரு முட்டை நயன்தாரா உடையதா ? விந்தணு யாருடையது ? பொலிஸ் விசாரணை ஆரம்பமானது

www.pungudutivuswiss.com

நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி, படு ஜாலியாக தமக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக ரிவீட்டர் பக்கத்தில் பதிவைப் போட்டார்கள். ஆனால் அங்கே தான் பெரும் சர்சை வெடித்தது. இதனை இவர்கள் சற்றும் எதிர்பார்கவில்லை. காரணம் என்ன

தெரியுமா ? வாடகை தாய் மூலம் பிள்ளை பெற்றுக் கொள்வது என்றால், அதில் ஏகப்பட்ட சிக்கல் உள்ளது. இம் முறை மூலம் பிள்ளை பெற்றுக் கொள்ள இந்தியாவில் தற்போது, ஏகப்பட்ட சட்ட திட்டங்கள் உள்ளது. அவற்றை பின்பற்றி இருக்க வேண்டும். நயன்தாரா தனது உடல் அழகு கெட்டு விடக் கூடாது என்ற காரணத்தால் தான், வாடகை தாயை வைத்து பிள்ளையை பெற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் ஒரு பெண் தன்னால் பிள்ளை பெற்றுக் கொள்ள முடியாது என்று மருத்துவ ரீதியாக உறுதி செய்தால் மட்டுமே வாடகை தாயை வைத்துக் கொள்ள முடியும்.

இந்த நிலையில் நயன் நயன்தாராவால் பிள்ளை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றால், அவரது கரு முட்டையை பாவிக்க முடியாது. விக்னேஷ் சிவனின் விந்தை எடுத்து வாடகை தாயின் கருவுடன் சேர்த்து பிள்ளையை உருவாக்கி இருக்க வேண்டும். அப்படி என்றால் இந்தக் பிள்ளைகள், நயன் தாராவின் பிள்ளைகளே இல்லை. இது போக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த வழக்கை விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனால் 3 பேர் அடங்கிய குழு ஒன்று பொலிசாருடன் சென்று நயன் தாராவையும் விக்னேஷ் சிவனையும் விசாரிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெறுவது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதாகவும், சட்டம் அதன் பிறகுதான் அமுலுக்கு வந்ததாகவும் கூறி நயன் தாரா தரப்பு தப்பிக்க பார்கிறது. இதனை அந்த 3 அதிகாரிகளும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இன் நிலையில் தம்பதிகள் சட்டத்தை மீறி இருந்தால், சிறை செல்ல நேரிடும். இது ஒரு பெரும் குற்றம் ஆகும். இன் நிலையில் நயன் தாராவின் கரு முட்டை பாவிக்கப்பட்டதா இல்லை வாடகை தாயின் கரு முட்டை பாவிக்கப்பட்டதா ? என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்

ad

ad