புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2023

யாழில் அடாடித்தனம் காட்டிய பாதிரியார்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் இருபாலை கானான் சிறுவர் இல்லத்தில் 80 வயது போதகரால் 
சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள் உள்ளானதாக வெளியான
 தகவலால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த செய்தியை வெளியிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பல் ஒன்று உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள் முற்றுகையிட்டுள்ளது.

பாதிரியார் தலைமையிலான குழுவொன்று பேருந்து வந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளது.

அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் கிறிஸ்தவ மத போதகரின் தலைமையிலான கும்பல் ஒன்று அத்துமீறிநுழைந்து வீட்டில் இருந்த வயோதிப பெண் உள்ளிட்ட இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், போதகர் , அவரது மகன் உள்ளிட்ட மூவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad