புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 டிச., 2023

கொக்குத்தொடுவாய் புதைகுழி மனித எச்சங்கள் யாழ்ப்பாணத்தில் பகுப்பாய்வு

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான பகுப்பாய்வு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த தகவலை சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான பகுப்பாய்வு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த தகவலை சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் நேற்ற இடம்பெற்றது.

இதுவரை நடைபெற்ற அகழ்வுப் பணிகளின் போது மீட்கப்பட்ட 40 மனித எச்சங்களின் வயது மற்றும் பாலினம் தொடர்பில் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் பகுப்பாய்வு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதன்போது சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ இன்று நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

அத்துடன் திட்டமிட்டவாறு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள வழக்கு விசாரணையில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad