பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். உப்பு பிரச்சினை பற்றி பேசும் போது ஆளும் தரப்பால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அரசாங்கத்தின் பலவீனத்தை சுட்டிக்காட்டும் போது அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இவர்களுக்கு கிடையாது. எதிர்க்கட்சியின் உறுப்பினர் அர்ச்சுனா எழுப்பிய கேள்விகளுக்கு கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி முறையாக பதிலளிக்கவில்லை.மாறாக பாதாள குழுவை போன்று பேசுகிறார். அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி சபைக்கு பொருந்தாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை 'ஜசே' என்று விழித்து பேசினார்.இந்த வார்த்தையை ஹன்சாட் பதிவில் இருந்து நீக்குங்கள். குறைகளை சுட்டிக்காட்டும் போது அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள். அரிசி, மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தேவையில்லை, புறக்கோட்டை வர்த்தகர்கள் அவற்றை இறக்குமதி செய்வார்கள். ஆகவே பொறுப்பான அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று ஆளும் தரப்பினர் கடந்த காலங்களில் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால் தற்போது அரசாங்கம் இறக்குமதியை மாத்திரமே தங்கியுள்ளது. கடந்த மாதங்களில் அரிசிக்கான தட்டுப்பாடு, தற்போது உப்புக்கு தட்டுப்பாடு ஆகவே வர்த்தகத்துறை அமைச்சர் வசந்த சமரசிங்க, கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து விலகி , பொறுப்பினை புறக்கோட்டை வர்த்தகர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்றார். |