புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2025

மதுபான உரிமங்கள் குறித்த தகவல்களை நீதிமன்றில் சமர்ப்பிக்க உத்தரவு! [Thursday 2025-06-05 06:00]

www.pungudutivuswiss.com


முன்னாள் நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, கலால் சட்டத்தை மீறி மதுபான உரிமங்களை வழங்கியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் நேற்று (03) அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, கலால் சட்டத்தை மீறி மதுபான உரிமங்களை வழங்கியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் நேற்று (03) அனுமதி அளித்துள்ளது

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அது நடைபெற்ற திகதி வரையிலும், அதற்கு முந்தைய ஆண்டிலும் வழங்கப்பட்ட மதுபான உரிமங்கள் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு தற்போதைய கலால் பணிப்பாளர் நாயகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு ஜூலை (26) அன்று ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதிக்கும் செப்டம்பர் (21) அன்று ஜனாதிபதித் தேர்தல் திகதிக்கும் இடையில் பிரதிவாதிகள் சட்டத்தை மீறி புதிய மதுபான உரிமத்தை வழங்கியதாகக் குற்றம் சாட்டினார்.

அரசியல்வாதிகளின் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் 19 வயது மகனுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் மதுபான உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ad

ad