பிரெஞ்சு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி பிரெஞ்சு கடற்பரப்புக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 'பேய்க்கப்பல்' என அழைக்கப்படும் (PÉTROLIER FANTÔME) கப்பல் ஒக்டோபர் 2, நேற்று வியாழக்கிழமை பிரெஞ்சு கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. கப்பலில் உள்ள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
கப்பலின் இரு மாலுமிகளும் சீன குடியுரிமை கொண்டவர்கள் எனவும், அவர்கள் விடுவிக்கப்பட்டதோடு, கப்பலும் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.