-

7 டிச., 2025

www.pungudutivuswiss.com
முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை காலமானார

முன்னாள் அமைச்சர் 'சொல்லின் செல்வர்' செல்லையா இராஜதுரை தனது 98 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.


தலைசிறந்த சிறந்த பேச்சாளராக திகழ்ந்த அவர் 1956 முதல் 1989 வரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியில் இருந்துள்ளார்.

மட்டக்களப்பு அரசடி வித்தியாலயத்தில் (தற்போது மகாஜனகல்லூரி) ஆரம்பக் கல்வியை முடித்து, பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை முடித்தார்.

நாளுக்கு நாள் உயர்வடையும் பலி எண்ணிக்கை! பலர் காணாமல்போயுள்ளதாக தகவல்
நாளுக்கு நாள் உயர்வடையும் பலி எண்ணிக்கை! பலர் காணாமல்போயுள்ளதாக தகவல்
அரசியல் வரலாறு
இராசதுரை ஊடகவியலாளரும், சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்வேட்பாளராக முதன் முதலாக தந்தைசெல்வாவால் மட்டக்களப்பு தொகுதியில் 1956 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.

முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை காலமானார் | Former Minister Sellaiya Rajadurai Passed Away


இதனைதொடர்ந்து மார்ச் 1960, யூலை 1960, 1965, 1970 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து 1977 தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22 இல் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, 1979 மார்ச் 7 இல் ஜே. ஆர். ஜெயவர்தனா தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.

இதற்காக அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.பின்னர் இவர் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார். பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் புலம் பெயர்ந்து மலேசியாவில் சிலகாலம் வாழ்ந்து பின்னர் சென்னையில் வசித்தார்.

இந்தியாவின் அர்ப்பணிப்புக்கள்: உயர்ஸ்தானிகர் வணிக தலைவர்களுக்கு விளக்கமளிப்பு
இந்தியாவின் அர்ப்பணிப்புக்கள்: உயர்ஸ்தானிகர் வணிக தலைவர்களுக்கு விளக்கமளிப்பு
வடகிழக்கில் தொடர்ச்சியாக மக்களால் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்

இராசதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1967 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராக ஓராண்டு காலத்திற்குப் பதவியில் இருந்தார். ஏறக்குறைய 33, வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக வடகிழக்கில் தொடர்ச்சியாக மக்களால் தெரிவானவர் இவர் மட்டுமே..


மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது மாநகர முதல்வரும் இவரே. 1973,செப்டம்பர்,07,ல் யாழ்ப்பாணம் மல்லாகத்தில் இடம்பெற்ற இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி மகாநாட்டில் தலைவராக செல்லையா இராசதுரை அவர்களும். அ.அமிர்தலில்கம் அவர்களும் விரும்பி இருவரும் தலைவர் பதவியை பெறுவதற்காக போட்டி நிலை உருவான வேளையில் தந்தை செல்வா அவர்கள் தலையிட்டு இருவரையும் சாந்தப்படுத்தி செல்லையா இராசதுரையை விட்டுக்கொடுக்கொடுக்குமாறு கூறி அ.அமிர்தலிங்கத்தை தலைவராக தெரிவுசெய்தார்.

முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை காலமானார் | Former Minister Sellaiya Rajadurai Passed Away

1977,யூலை,21, ல் இறுதியாக நடைபெற்ற தொகுதிவாரியான தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணியில் மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் இவரை தோற்கடிக்க கவிஞர் காசி ஆனந்தனை இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி வேட்பாளராகவும், செல்லையா இராசதுரையை தமிழர் விடுதலை கூட்டணியிலும் போட்டியிட வைத்தபோதும் இவரே வெற்றிபெற்றார்.
மேலும் கண்டறிக
இலங்கை மரண அறிவித்தல் சேவை
இலங்கைக்கு
தமிழ் பக்தி பாடல்கள்
இலங்கைக்கான
சுவிஸ் செய்திகள்
தொழில்நுட்ப கேஜெட்கள்
இலங்கை
இலங்கை விளையாட்டு உபகரணங்கள்
ஆன்மீக புத்தகங்கள்
இலங்கைச் செய்திகள்
தமிழர் விடுதலைகூட்டணியின் தலைமை விட்ட பொறுப்பற்ற செயலால் இருவரை வேட்பாளராக நிறுத்தியபோதும் செல்லையா இராசதுரை அவர்களே வெற்றிபெற்றார்.

அரச ஊழியர்களுக்கு சிறப்பு கொடுப்பனவைக் கோரும் ஐக்கிய தேசியக்கட்சி
அரச ஊழியர்களுக்கு சிறப்பு கொடுப்பனவைக் கோரும் ஐக்கிய தேசியக்கட்சி
தமிழ்தேசிய அரசியலுக்கு அத்திவாரம்
இதனால் அவர் தமிழர் விடுதலை கூட்டணி தலைமை தமக்கு துரோகம் செய்ததாக கூறியபின்னர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து இந்துகலாசார அமைச்சர் பதவி பெற்றார். மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதி ஏன் உருவானது என்பது ஒரு தமிழரும், ஒரு முஷ்லிம் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினராக பிரதிநித்துவம் பெறுவதற்காகவே இரட்டை தொகுதியானது.

இந்த விடயத்தை அறியாத அல்லது அறிந்தும் இரண்டு தமிழர்களை ஒருதலைமையான தமிழர் விடுதலை கூட்டணி அ.அமிர்தலிங்கம் தலைமை எடுத்த முடிவானது செல்லையா இராசதுரையை தோற்கடிப்பதற்கே. ஆனால் மட்டக்களப்பு தொகுதி மக்கள் மீண்டும் அவரையே வெற்றி பெறவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் எழுதிய நூல்கள்:

ராசாத்தி – குறும் புதினம் - 1982

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் - சொற்பொழிவுகளின் தொகுப்பு

அன்பும் அகிம்சையும் - தேசிய ஒற்றுமைக்கு வழி – 1984

மிஸ் கனகம் - சிறுகதைத் தொகுப்பு

இலங்கையில் மகா அஸ்வமேதயா

ad

ad