புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2012


Yogeshwaran Velu
Friday
ஆனந்த விகடனின் உண்மை முகம் எது?

*********************************************
அன்பர்களே..அருளினியன் என்பவர் ஆனந்த விகடனில் எழுதிய 'விபச்சாரியாக மாறிய முன்னாள் போராளியின் கதையை' ஒரு நண்பர் சிறிது நேரத்துக்கு முன்புத
ான் எனது முகநூல் சுவரில் பதிவு செய்திருந்தார்.அவருக்கு முதலில் நன்றி.அந்த குறிப்பிட்டபெண்ணின் பேட்டியை முழுவதுமாகப் படித்தேன்.அதிலிருந்து நான் புரிந்து கொண்ட சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து

கடனிலிருந்து மீள்வதற்காகவே நண்பனை படுகொலை செய்தேன்! நகை வர்த்தகர் கொலை குறித்து சந்தேகநபர் வாக்குமூலம்
மனைவியின் நகைகள் அடகு வைக்கப்பட்டிருந்தன. பெருந்தொகையான கடன் இருந்தது. கடன் தொல்லையிலிருந்தும் பல பிரச்சினைகளிலிருந்தும் மீள்வதற்காகவே நண்பனான சின்னத்துரை இந்திரேஷ்வரன் என்பவரை கழுத்து நெரித்து படுகொலை செய்தேன்.

ஐ.நாவில் இந்தியா மௌனம்: மேற்குலகம் கண்டனம்: சர்வதேசத்தின் 210 பரிந்துரைகளில் 110ஐ ஏற்றுக்கொண்ட இலங்கை
ஜெனிவா- ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் இன்று இடமபெற்றிருந்த எனப்படும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பிலான மீளாய்வுக்கூட்டம் நிறைவடைந்தது
 புங்குடுதீவில் சகல வசதிகளையும் உள்ளடக்கக்கூடிய கட்டடங்களை கொண்ட மாவட்ட மருத்துவமனை ஒன்று உண்டு . ஆனாலும் அங்கு வாழும் மக்கள் வைத்திய சேவையை பெறுவதற்குரிய நிரந்த மருத்துவர் இல்லாமை பெரும் வேதனைக்குரிய விடயமாகும் . இவ் வெற்றிடம் விரைவில் நிரப்பப்பட வேண்டும்
வே . சு . கருணாகரன் ஆலோசகர் - சூழலியல் மேம்பாட்டு அமைவனம் ( சூழகம் ) .

சகல பிரதேசங்களுக்கும் சுகாதார சேவை முழுமையாக கிடைக்க வேண்டும் கொழும்பு ,

ஸ்ரீ நிதியின் அசகாய திறமை


கர்நாட இசைப்பிரியர்களுக்கு விருந்தளிக்க குழந்தை ஸ்ரீ நிதியின் அசகாய திறமைகளை கண்டுகளியுங்கள்
பூகோள கால மீளாய்வு அமர்வில் இலங்கை தொடர்பில் 210 பரிந்துரைகள் சமர்ப்பிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பூகோள கால மீளாய்வுஅமர்வுகளில் இலங்கை தொடர்பில் 210 பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
110 அகதிகளுடன் படகொன்று கிறிஸ்மஸ் தீவில் இடைமறிப்பு
110 அகதிகளுடன் படகொன்று இன்று காலை கிறிஸ்மஸ் தீவு கடற்பிராந்தியத்தில் இடைமறிக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடற்படையினரிடமிருந்து பொன்னாலை மக்களின் காணிகள், வீடுகள் 22 ஆண்டுகளின் பின்னர் இன்று கையளிப்பு
22ஆண்டுகளுக்கு பின்னர் பொன்னாலை மக்களிடம் அவர்களது காணிகளை சிறிலங்காக் கடற்படையினர் இன்று உத்தியோகப் பூர்வமாகக் கையளித்துள்ளனர்.

குற்றப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி மீள சிந்திக்க வேண்டும்: மஹாநாயக்க தேரர்கள்
பிரதம நீதியரசர் ஷரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீள சிந்திக்க வேண்டுமென இலங்கையின் மிக முக்கியமான பௌத்த மஹாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னத்துரை இந்திரேஷ்வரனின் பூதவுடலுக்கு செட்டித்தெருவில் அஞ்சலி! புதன்கிழமை இறுதிக் கிரியை!
நானுஓயா பகுதியிலிருந்து கடந்த 31ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நகைத்தொழில் வர்த்தகரான சின்னத்துரை இந்திரேஷ்வரனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று கொழும்பு செட்டியார் தெருவில் வைக்கப்பட்டிருந்தது.

கே.பியின் வலைக்குள் சர்வதேச இராஜதந்திரமா அல்லது சர்வதேச இராஜதந்திரத்தின் வலைக்குள் கே.பியா?
சர்வதேசத்தின் இராஜதந்திர வலைக்குள் சிக்கித் தவிக்கிறாரா கே.பி அல்லது தனது இராஜதந்திரச் செயல்பாடுகள் மூலமாகச் சிறந்த இராஜதந்திரியாகச் செயற்பட்டு தமிழீழத் தனியரசை உருவாக்க வழியமைக்கிறாரா கே.பி.என்கிற கேள்வி பல தமிழ் மக்களிடம் நிலவுகிறது.

செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனரை கொலை செய்ததாக ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனரான சின்னத்துரை இந்திரேஸ்வரன் என்பவரை கொலை செய்ததாக ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் பாரிய விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்: பிரித்தானியா எச்சரிக்கை
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராய்ந்த பிரித்தானியா, இலங்கை அரசு பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

குற்றப் பிரேரணைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை!– மேல் நீதிமன்ற நீதிபதிகள்
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்மானித்துள்ளனர்.

5 நவ., 2012


பாடசாலைச் சீருடை அணிந்து கையில் மதுபானப் போத்தல்களோடு நின்று இளம் பெண்கள் மற்றும் மாணவிகளுடன் சேட்டையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 6 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் பரிதாபம் - ஆஸ்பத்திரியில் இறந்த பெண்; சிகிச்சையில் குளறுபடியா?
மட்டக்களப்பு, பழுகாமத்தில் இருந்து கை உடைவு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவந்த குடும்ப பெண்ணொருவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
முல்லை. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர் சரவணபவன் எம்.பி
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேசியத் தொண்டு நிறுவனமான சக்தி அறவாரியமும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் இணைந்து அத்தியாவசியப் பொருட்களை இன்று வழங்கி வைத்தனர். 
உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ள நவுரு தீவு புகலிடக் கோரிக்கையாளர்கள்
நவுரு தீவுகளில் உள்ள 300 புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எனினும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் நாளிற்கு நாள் மாறுபடுவதன் காரணமாக, 
2013 ஜெனிவாவில் புதிய போர்க்குற்ற ஆதாரங்கள் கடும் அச்சத்தில் இலங்கை; ஐ.நாவுடன் பேச முயற்சி
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் இலங்கை அரசு தொடர்ந்தும் கடும் அச்சத்தில் உறைந்துள்ளது என்றும் மாநாடு தொடர்பில் அரசின் பிரதிநிதிகள் சிலர் விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்டத்தினரை சந்தித்துப் பேச்சு
ஜெனிவாவில் இலங்கையை கலங்க வைத்த அமெரிக்கா; இந்தியா, கனடா, ஜேர்மன் நாடுகளும் கேள்விக் கணைகள்
உலக நாடுகள் ஒவ்வொன்றும் நேரடியாகவே இராஜதந்திரச் சமரில் ஈடுபடும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தொடரில்  இலங்கை மீது அமெரிக்கா, இந்தியா, கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகள் நான்கு திசைகளிலிருந்தும் கூட்டாக

ad

ad