புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2014

 யாழில் இருவாரத்தில் 327 பேர் கைது 
யாழ். மாவட்டத்தில் கடந்த இரண்டு வார காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் 327 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கம வன்முறை! பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரனுக்கு அச்சுறுத்தல்!- உயிர் பாதுகாப்பிற்காக இங்கிலாந்தில் தஞ்சம்
அளுத்கம வன்முறைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 13 பேரையும் விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட வேண்டுகோளைப் புறக்கணித்ததற்காக பிரதிப்

லண்டன் பொருளியல் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் கைது
லண்டன் பொருளியல் கல்லூரியில் சர்வதேச அபிவிருத்தி மற்றும் அவசர மனிதாபிமான நலன்புரி பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளராக பணியாற்றும் கலாநிதி ராஜேஷ்

அமைச்சர் பவித்ராவை கெட்ட வார்த்தையால் திட்டிய பிரதியமைச்சர்

மின்வலு எரிசக்தி பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர, தன்னை பகிரங்க கூட்டங்களில் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கிளிநொச்சியில் துயரச் சம்பவம்
குளத்தில் மூழ்கி மூன்று உயர்தர மாணவிகள் உயிரிழப்பு
கிளிசொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் மூவர் குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்.தேவியை வரவேற்க நாவற்குழி பாலம் தயார் 
கொழும்பு -காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை ஒக்ரோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்  குடாநாட்டிலுள்ள  பிரதான  புகையிரத நிலையங்களின் புனரமைப்பு பணிகள்  துரித கதியில் இடம்பெற்று
தீர்மானங்கள் எட்டப்படாததால் இரண்டாவது நாளாக தொடரும் பேச்சுவார்த்தை 
news
மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இலங்கை – இந்திய அதிகாரிகளுக்கு இடையில் புதுடில்லியில் நேற்று நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தை இன்று இரண்டாவது நாளாகவும் தொடரவுள்ளது.
 
மன்னார் வளைகுடா பகுதியில் இருநாட்டு மீனவர்களும் சட்ட ரீதியில் மீன்பிடிப்பது தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்படுவதாக இதன்போது தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில் நேற்றைய பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சின் தமிழ் ஊடக இணைப்பாளர் எஸ்.டி. சதாசிவம் குறிப்பிட்டார்.
இலங்கைப் பெண் சடலமாக மீட்பு 
 மேற்கு சிட்னியில் சிறிய நதிப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரின் சடலம் தொடர்பாக அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 
இலங்கைக்கு வெற்றி இலக்கு 101 
இலங்கை மற்றும் சுற்றுலா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி ஆரம்பமாகியுள்ளது.

இத்தாலி செல்ல முயன்ற இரு சிறுவர்களுக்கு பிணை! பெண்ணொருவருக்கு விளக்கமறியல்
ஜோர்தானிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட யாழ். சிறுவர்கள் இருவரையும் பெற்றோர்களிடம் ஒப்படைக்குமாறு நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குகிறாரா? பரபரப்பு தகவல்
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையைத் தொடர்ந்தும் இந்தியா நம்பப் போகிறதா?
ஈழத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு அதன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

2015 ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல்! திகதியை கணித்து கூறிய ஜோதிடர்கள் 
ஜனாதிபதித் தேர்தலை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் நடத்த அரசாங்கம் தயாராகி வருவதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசு முறை பயணமாக சனிக்கிழமை காலை ஜப்பான் புறப்பட்டு சென்றார். மோடி கடந்த மே மாதம் பிரதமராக பதவியேற்ற பின் 3வது வெளிநாட்டு பயணம் இது,

நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
 
நடிகர் அஜீத்குமார் வீடு திருவான்மியூர் கலாஷேத்ராவில் உள்ளது. நேற்று இரவு 108 ஆம்புலன்ஸ் சேவை நம்பருக்கு மர்ம நபர் பேசினான். திருவான்மியூரில் உள்ள அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் அது வெடிக்கும் என்று சொல்லி போனை துண்டித்து விட்டான். 

இலங்கை கடலில் காணாமல் போன தமிழக மீனவர்களை தேடும் பணி 4வது நாளாகவும் தொடர்கிறது
இலங்கையின் நெடுந்தீவுக்கு அருகில் தமது விசைப்படகு மூழ்கியநிலையில் நடுக்கடலில் காணாமல் போயுள்ள மூன்று தமிழக மீனவர்களையும் தேடும் பணிகள் நான்காவது நாளாக இடம்பெற்று வருகின்றன.

ஜெயலலிதாவின் சந்திப்பை எதிர்பார்த்து தமிழகத்தில் தங்கியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்
இந்திய விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது தொடர்ந்தும் தமிழகத்தில் தங்கியுள்ளனர். அவர்கள், இன்னமும் த
8 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்த தந்தைக்கு மரண தண்டனை
எட்டு வயதான மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீட்டுக்கு உள்ளேயே புதைத்த  தந்தை ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23.02.2014 வரை சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் ஆற்றிய சேவைகள் சில.(23.02.2014 வரையிலான பழைய நிர்வாகம் )
* யாழ் இடம்பெயர்வின் போது  மக்களின் உடனடி அத்தியாவசிய தேவைகளுக்காக 80 000 சுவிஸ் பிராங்குகள் பங்களிப்பு (80 000 சுவிஸ் பிராங் )
* புங்குடுதீவு பிரதான வைத்தியசாலையின் வெளிநோயாளர பிரிவு தொடர் கட்டிடடம் , மருத்துவர் தங்கும் இல்லம் என்பன முற்றுலுமாக புதுப்பித்தமை ( சுமார் 15 லட்சம் ரூபா )
* சாட்டியில் நீர் எடுக்கும் வீதி சீரமைப்புக்கு சர்வோதயத்துக்கு நிதி உதவி (2000 சுவிஸ் பிராங் )
* யுத்த சூழ்நிலை முடிய மீதிரப்பு செய்யபட்ட முதல் 5 பாடசாலைகளுக்கு நிதி உதவி (1 லட்சம் ரூபா வீதம் )
14.04.2002 க்கு பின்னர் மக்களிடம் எந்தவிதமான நிதிசேர்ப்பும் செய்யாமல் நிர்வாக உறுப்பினர் மட்டுமே  தங்களது சொந்த பணத்தில் செய்த சேவைகள் பின்வருமாறு 
* சண்முகநாதன் மகா  வித்தியாலயம் மீல்திரப்புகான உதவி (4000 சுவிஸ் பிராங் )

* புங்குடுதீவின் தண்ணீர் விநியோகதுக்கென 36 லட்சம் ரூப பெறுமதியான பௌசர் ஒன்றை சர்வோதயதுக்கு வழங்கியமை (36 லட்சம் ரூபா )
* பாடசாலைகளின் கற்றல் உபகரனகளுக்கான தேவைக்கு ந.பேரின்பநாதன் மூலம் நிதி உதவி (2000 சுவிஸ் பிராங் )
* எழுகை அமைப்புக்கு புனர்வாழ்வு நிதி (1000 சுவிஸ் பிராங் )

14.04.2002 க்கு பின்னர் மக்களிடம் எந்தவிதமான நிதிசேர்ப்பும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
ப்ரான்சில் 17 வயதுதமிழ் மருத்துவ மாணவி பல சாதனைகள் படைத்துள்ளார்

ப்ரான்சில் தமிழ் மருத்துவ மாணவி பல சாதனைகள் படைத்துள்ளார் 17 வயது நிரம்பிய மாணவி 250க்கு மேலான சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக செய்த்துள்ளார் ! ஆண்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் கண்டு பிடித்துள்ளார் !
இவருக்கு ஃபிரான்ஸ் அரசாங்கம் பல விதமா

ad

ad