புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூலை, 2014

ஒளிரா விளக்கு ரொனால்டோ: போர்த்துக்கல் வெளியேற காரணம்? 
போர்த்துக்கல் அணி வெளியேறியதற்கு பலரும் ரொனால்டோவை காரணம் காட்டி வந்த நிலையில்இ இது பற்றி பயிற்சியாளர் மானுவேல் கருத்து தெரிவித்துள்ளார்.


இந்த உலகக்கிண்ணத்தில் போர்த்துக்கல் அணி ஒளிராத விளக்காகவே விளங்கியது. முதல் போட்டியில் மோசமான தோல்வி ஆறுதல் வெற்றியுடன்  வெளியேற்றம் என இடம் தெரியாமல் போனது.

நட்சத்திர ஆட்டக்காரர் ரொனால்டோ காயத்தினால் அவதிப்பட்டு வந்தார். அவர் மொத்தத்தில் ஒரு கோல் மட்டுமே அடித்தார்.

இந்நிலையில் முன்னணி பயிற்சியாளர் மானுவேல் ஜோஸ் இது பற்றி கூறுகையில் ரொனால்டோவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததே அணியின்
 வீழச்சிக்கு காரணம்.

இவரை கிடைப்பதற்கு அரிதான ஒரு 'வைர மோதிரம்' போல போர்த்துக்கல் அணி நிர்வாகம் கருதியது. மற்ற வீரர்களை மிகவும் குறைவாக எண்ணியது.

முழங்கால் காயத்தால் அவதிப்பட்ட ரொனால்டோ திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருக்கு தன் அணி மீது
 நம்பிக்கை காணப்படவில்லை.

மேலும் சக வீரர்களையும் நம்பவில்லை. இதனால் தான் போர்த்துக்கல் அணியை கரை சேர்க்க முடியவில்லை என்று
 கூறியுள்ளார்.

ad

ad