புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2020

12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை! சுய அறிவிப்புப் படிவம் (Autocertificazione) புதிய அரசாங்க விதிகள் (அதை நிரப்புவது எப்படி).சுய அறிவிப்புப் படிவத்தை நிரப்புவது எப்படி:


தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் இறுக்கமான நெறிமுறைகளை கொண்டுவருவதற்கு அரசாங்கம் ஆலோசிக்கின்றது. வெளிவந்ததும் த
மிழ் தகவல் மையத்தில் உங்களுக்கு அறியத்தருவோம்.

இறுதியாக வெளியிடப்பட்ட உள்துறை அமைச்சக உத்தரவு ஆணையின் படி என்ன செய்ய முடியும் மற்றும் என்ன தடைசெய்யப்பட்டுள்ளது என்ற புதிய விதிமுறைகளின் உள்ளடக்கம் கீழே:

👉🏾 புதிய படிவத்தினை தரவிறக்கம் செய்ய 👈🏾

சுய அறிவிப்புப் படிவம்
அதை அச்சிட்டு நிரப்ப வேண்டும். இது கணினியிலிருந்து நேரடியாக நிரப்பப்பட்டு அச்சிடலாம். அச்சிடுவதற்கான வாய்ப்பு உங்களிடம் இல்லையென்றால், உங்கள் கைத்தொலைபேசியுடன் படம் எடுத்தும் வைத்துக்கொள்ளலாம். இந்த வசதிகள் இல்லாதவர்கள் அதை கையால் எழுதி வைத்துக்கொள்ளலாம்.
புதிய படிவத்தை நிரப்புவது எப்படி என்று எடுத்துக்காட்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
படிவம்
அதன் அனைத்து பகுதிகளும் நிரப்பப்பட வேண்டும். எப்போதுமே வழக்கமான நகர்வாக இருந்தால், நீங்கள் அதன் காலவரையை குறிக்கலாம் (தினசரி, மாற்று நாட்கள், வாராந்திரம்). மேலும், நகர்வுகள் வேறுபடுமாயின், அவற்றின் காரணம் மற்றும் திகதி குறிக்கப்பட வேண்டும். புதிய படிவத்தை நிரப்புவது எப்படி என்று எடுத்துக்காட்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வைரசு தொற்றுக்கு உள்ளாகாதவர்கள்
புதிய படிவத்தில், நீங்கள் வைரசுதொற்றுக்கு உள்ளாகவில்லை என்று குறிப்பிட வேண்டும்: இந்த விடயத்தில் இந்த படிவம் கொரோனாவைரசு தொற்றுப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டவர்களை குறிக்கிறது. பரிசோதனை மேற்க்கொள்ளாதவர்களுக்கு தவறான அறிக்கை என்ற பெயரில் வழக்கு பதியப்பட மாட்டாது ஆனால் அவர்களுக்கு 37.5 க்கு மேல் காய்ச்சல் இல்லை என்றும் வேறு அறிகுறிகள் இல்லை என்றும் அறிவிக்க வேண்டும்.
முகமூடிகளைப் பயன்படுத்துவது நல்லது.
நீங்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக கடைகளுக்கு மற்றும் மருந்தகத்திற்குச் செல்லலாம். முகமூடியைப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பிட்ட “பாதுகாப்பு இடைவெளியை” கடைப்பிடிப்பது கட்டாயமாகும். “நிரூபிக்கப்பட்ட ஒத்திவைக்கப்பட முடியாத தேவைகள்” இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் பகுதியில் தான் நடமாட வேண்டும், அதிகபட்சம் இரண்டு நபர்கள் மட்டுமே வெளியே செல்லலாம்.
சிற்றுந்து (macchina)
வாகனத்தில் அதிகபட்சமாக இரண்டு நபர்கள் மட்டுமே செல்லலாம். ஒருவர் முன் இருக்கையிலும் மற்றவர் பின் இருக்கையில் இருப்பது நல்லது. இவ்வாறாயின் பாதுகாப்பு இடைவெளியை கையாளலாம்.
மோட்டார்வண்டி (motocicli), துவிச்சக்கர (bicicletta) வண்டி
மோட்டார்வண்டியில் அல்லது துவிச்சக்கர வண்டியில் செல்பவர்கள் வெளியே செல்லும் சரியான காரணத்தை நிரூபிக்க வேண்டும்.
நடைப்பயிற்சி (passeggiate)
இது நீங்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் மேற்க்கொள்ளலாம். பல நகராட்சிகள் கூட்டநெரிசல்களை தவிர்ப்பதற்காக பூங்காக்களை மூடிவருகின்றன. கண்காணிப்பற்ற பசுமையான பகுதிகளுக்குச் செல்ல நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் தனியாக இருக்க வேண்டும், அதிகபட்சம் இரண்டு பேர்கள் மற்றும் உங்கள் பாதுகாப்பு இடைவெளியை கவனத்தில் வைத்திருங்கள்.
நாயுடன் நடைப்பயிற்சி (portare il cane a passeggio)
அதிக நேரம் வெளியே இருக்க நாயுடன் நடப்பதை காரணமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும். நீங்கள் பசுமையான பகுதிகளுக்குச் சென்றால், மற்றவர்களிடம் இருந்து தள்ளி நிள்ளுங்கள்.
வேலைத்தளத்தை விட்டு வெளியே செல்லுதல்
வேலைக்குச் செல்வோர் “நிரூபிக்கப்பட்ட காரணங்களுக்காக” மட்டுமே பணியிடத்தை விட்டு வெளியேற முடியும் என்றும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்நியர்களுடன் சந்திப்பை தவிர்க்க வேண்டும் என்றும் காவல்துறையினரின் கையேடு தெளிவுபடுத்துகிறது. உங்கள் தொழில் தொடர்பான காரணங்களுக்காக வெளியேறும் பட்சத்தில் நீங்கள் உங்கள் பாதுகாப்பு இடைவேளியை கவனத்தில் வைத்திருக்க வேண்டும், மற்றும் முகமூடி அணிவது உகந்தது.
வயதானவர்கள்
நீங்கள் வயதானவர்களுக்கு மருந்துகள் அல்லது மளிகைப் பொருட்களைக் கொண்டு செல்லலாம். கையுறைகள் மற்றும் முகமூடி அணிய வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.
தனிமைப்படுத்தல்(Quarantena)
கொரோனாத்தொற்றுக்கு அறிகுறியற்றவர்களாக இருந்தாலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் அல்லது தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்களுக்கும் வெளியே செல்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
உடல்நல காரணங்கள்
மருத்துவரிடம் செல்ல வேண்டியவர்கள் அதற்காக செல்லலாம், ஆனால் செல்வதற்க்கான காரணத்தை நிரூபிக்க வேண்டும். அதேபோல, மருத்துவ நிபுணர்களிடம் (visite specialistiche) மற்றும் மருத்துவ பகுப்பாய்வுகளுக்கு (analisi cliniche) உட்படுத்த வேண்டிய தேவைகளுக்காக செல்பவர்களுக்கும் அதே நடைமுறை செல்லுபடியாகும். படிவத்தில், காரணத்தை தவிர, மருத்துவரின் பெயர் மற்றும் செல்லும் இடம் குறிப்பிடப்பட வேண்டும்.
கூட்டங்கள்
அவை தடைசெய்யப்பட்டுள்ளன. எனவே நீங்கள் கடைக்களுக்கு, மருந்தகத்திற்கு அல்லது பிற கொள்முதல்கள் செய்யச் செல்லும்போது கூட, நீங்கள் உங்கள் பாதுகாப்பு இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும்.
வசிக்கும் நகரத்தை விட்டு வெளியேறுதல்
அவசியமான தொழில் மற்றும் குடும்ப காரணங்களை தவிர வேறு ஒரு தேவைக்காகவும் ஒரு நகரத்தை விட்டு வேறொரு நகரத்திற்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
வேறு வீடுகள்
உங்களின் வேறு வீடுகளுக்குச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு அவசியமான காரணங்கள் இருந்தால் அதை நிரூபிக்க வேண்டும். இக் காரணம் ஏனைய மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் பிற சிக்கல்களைக் குறிக்கிறது (எடுத்துக்காட்டாக: எரிவாயு அல்லது நீர் கசிவுகள்).
வீட்டிற்குத் திரும்புதல்
ஆணை அமுல்படுத்தப்பட்ட நேரத்தில் வேறு வீடுகளில் அல்லது வெளிநாட்டில் இருந்தவர்கள் தங்கள் வீட்டிற்கு திரும்பலாம், ஆனால் அவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
தண்டனை
குறிப்பிடப்பட்ட காரணமின்றி வெளியேறுபவர்கள் மூன்று மாதங்கள் வரை கைது செய்யப்பட்டு, தண்டனைச் சட்டத்தின் 650 வது பிரிவில் வழங்கப்பட்டுள்ளபடி 206 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும். தனிமைப்படுத்தலை மீறுபவர்கள் 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பொது சுகாதாரத்திற்கு எதிரான தீங்கிழைக்கும் குற்றங்களுக்கான வழக்கும் பதியப்படும்.
சுய அறிவிப்புப் படிவத்தை நிரப்புவது எப்படி

ad

ad