பீலபெல்ட் நகரில் கவனயீர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் வான்
தமிழ் இன அழிப்பிற்கு நீதிகோரி ஐ.நா மன்றை நோக்கி ஜெனீவா செல்லும் தமிழ் வான்,
பல நாடுகளைக் கடந்து யேர்மன் வந்து,பல நகரங்கள் ஊடாக இன்று பீலபெல்ட் நகரை வந்தடைந்தது. இன்று கடுமையான பனிப்பொழிவும், குளிருமாக இருந்தபோதும்,பீலபெல்ட் மக்கள் அதைப் பொருட்படுத்தாது, இப்போராட்டத்தை
முன்னெடுக்கும் சிவந்தன் அவர்களை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து தமிழ் வானின் கண்காட்சியும், கவனஈர்ப்பும் மாலை 4.30 மணியளவில் ஆரம்பமாகியது.
பின்னர் மாலை ஏழு மணியளவில் மக்கள் சந்திப்பு ஒன்றும் நடைபெற்றது. முன்னெடுக்கும் சிவந்தன் அவர்களை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து தமிழ் வானின் கண்காட்சியும், கவனஈர்ப்பும் மாலை 4.30 மணியளவில் ஆரம்பமாகியது.
மக்கள் மத்தியில் உரையாற்றிய சிவந்தன்,எம் இனத்தின் விடுதலைக்கு எம்மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் தேவையை எடுத்துக் கூறியதோடு,எதிர்வரும் 4ம் திகதி ஜெனிவாவில் நடைபெற இருக்கும் எழுச்சிப் பேரணியில் அனைத்துத் தமிழ்மக்களையும் இணையுமாறும் வேண்டுகோள் விடுத்தார். குறுகிய நேர இடைவெளிக்குள்ளும் ஒழுங்கமைப்புக்கள் அங்கு மிகச் சிறப்பாக நடைபெற்றன.