புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2013

பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது என இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது!– கோத்தபாய ராஜபக்
பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என்பது பற்றி இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என்பது இந்தியாவிற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நான்காம் கட்ட ஈழப் போரின் போதே இது அறிவிக்கப்பட்டது. இன்றும் அதே நிலைப்பாடு காணப்படுகின்றது, அதில் மாற்றங்கள் கிடையாது.
இது தொடர்பில் எந்தத் தரப்பினரும் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை.
இந்தியாவும் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தக் கூடாது.
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதாகத் தெரிவித்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.
பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு ஏற்கனவே இந்தியாவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது என கோத்தபாய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

ad

ad