புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூன், 2013

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா இருப்பது இலங்கை அரசுக்கு அச்சுறுத்தல்: கோத்தபாய ராஜபக்ச
ஈழத் தமிழர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு அளித்து வருவது இலங்கை அரசை கலக்கமடையச் செய்துள்ளது என பாதுகாப்புச் செயலரான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள கொத்தலாவல இராணுவ பல்கலைக் கழகத்தில் நேற்று முன்தினம் கோத்தபாய உரையாற்றிய போது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இருப்பது, இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணமே தமிழக அரசியலில் இலங்கை தமிழர் விவகாரம் மிக முக்கியமான அம்சமாக இருப்பதுதான். குறிப்பாக தேர்தல் சமயத்தில் இலங்கை விவகாரம் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது.
சமீபகாலமாக இலங்கை அரசை சர்வதேச தளத்தில் எதிர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு நெருக்குதல் அளித்து வருகிறார். இது இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.
இலங்கையில் வாழும் சில தமிழர்கள் தங்களுக்குள்ள நெருக்கத்தின் மூலம் தமிழகம் வழியாக வெளிநாடுகளில் வாழும் தமிழர் ஆதரவு அமைப்புகள் மூலம் தனித்தமிழ் ஈழம் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் கடல் மார்க்கமாக இலங்கைக்கு ஆயுதம் கடத்தப்படும் அச்சுறுத்தலும் உள்ளது. இலங்கையில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கத்துக்கு குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கும் ஆதரவு மூலம் கடல்மார்க்கமாக ஆயுதம் கடத்துவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. இது இலங்கை அரசுக்குப் பெரும் அச்சுறுத்தலாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் நுழைவதைத் தடுப்பதில் தீவிரம் காட்டுவதன் நோக்கமே, இத்தகையோர் மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதே என்றார்.
இந்திய எல்லையில் சீனாவின் அச்சுறுத்தல் இலங்கைக்கு மறைமுக ஆபத்தாக அமையும் என்று குறிப்பிட்டார். மிகப் பெரும் பொருளாதார வல்லரசாக சீனா உருவாகி வருகிறது. அதன் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்காவின் தயவை இந்தியா நாட வேண்டியிருக்கும்.அத்தகைய நிலையில் இப்பிராந்தியத்தில் உள்ள இலங்கைக்கு அது பெரும் பாதிப்பாக அமையும் என்று குறிப்பிட்டார்.
மாலைதீவில் தளம் அமைக்க நடக்கும் முயற்சி இப்பிராந்தியத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்கிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ad

ad