இரா.சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோர் நாளை யாழ். விஜயம்! திங்கள் வேட்புமனு தாக்கல் செய்வர்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சமபந்தன், வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்தித்து உரையாடவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
அதேவேளை தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளதாகவும், மக்களை சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
திங்கட்கிழமை ஐந்து மாவட்டங்களிலும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் என்றும் சிவசக்தி ஆனந்தன் கூறினார்.