புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2013

புதுடெல்லிக்கு வருமாறு முஸ்லிம் காங்கிரசுக்கு அழைப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை புதுடெல்லிக்கு வருமாறு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்டம் தொடர்பாகவும், அதிகாரப் பகிர்வு குறித்தும் பேச்சுக்களை நடாத்துவதற்கே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் கடந்த செவ்வாய்க்கிழமை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்கும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பின்போதே,அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிவ்சங்கர் மேனனின் இந்த அழைப்பை தாம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் விரைவில், புதுடெல்லி செல்லவுள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

ad

ad