புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2013

ஆணுறைக்குள் இரத்தினங்களை வைத்து அதனை மலவாயிலில் மறைத்து சிங்கப்பூருக்கு கடத்திச் செல்ல முயன்ற நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்,
குறித்த நபர் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான நபரொருவர் எனவும் அவர் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில்
கைதுசெய்யப்பட்டதாகவும் எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கு பயணிக்கும் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் SQ 402 விமானத்தில் குறித்த நபர் பயணிக்க இருந்துள்ளார்.
குறித்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே சுங்கப்பிரிவினர் அவரை சோதனைக்குட்படுத்தியுள்ளதுடன் இதன்போது மேற்கொள்ளப்பட்ட ஸ்கேனில் அவரது மலவாயிலில் வைரம் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவரிடமிருந்து 9 வகையான 32 இரத்தினங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றின் மொத்தப் பெறுமது 80 இலட்சம் ரூபாய் என கணிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இவரிடம் சுங்கப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

ad

ad