இன்று சர்வதேசம், யுத்த வெற்றிக் களிப்பில் கிடக்கும் மகிந்த அரசுடன் ஒரு மொழியில் பேசிக் கொண்டிருக்கிறது. எனவே, அந்த சர்வதேச அணுகுமுறையைக் குழப்புபவர்களாக நாங்கள் இருந்தவிடக் கூடாது. எங்களது செயற்பாடுகள் அதிக இராஜதந்திர நுணுக்கம் உடையதாக இருக்க வேண்டும்.
உண்மையில் நான் இந்த தேர்தலில் போட்டியிடுவது அத்தகையதொரு நோக்கத்தில் தான். கூட்டமைப்பின் தலைமையால் முன்னெடுக்கப்பட்டு வரும் இராஜதந்திர நகர்வுகளுக்கு என்னால் முடிந்த உதவிகளையும் வழங்க வேண்டும் என்பதே எனது நோக்கம். ஏனெனில், இராஜதந்திர அரசியலைக் கையாளுவதில் எனக்கும் கணிசமான அனுபவங்கள் உண்டு.
எனவே, மாகாண சபை எங்களுக்குப் போதும் என்று நாங்கள் குறிப்பிடவில்லை. போதும் என்று சொல்லக் கூடிய ஒன்றை அடைவதற்கான வழிமுறையாக, மாகாண சபையைக் கையாள வேண்டும் என்றுதான் குறிப்பிடுகின்றோம். - "PLOTE" தர்மலிங்கம் சித்தார்த்தன். — with Switzerland Siva-sandrabalan and17 others.
என்னை நோக்கி, எங்களது அமைப்பை நோக்கி, விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு எத்தகைய நோக்கங்களும் இருக்கலாம். அது பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் நாங்கள் ஒருபோதும் எங்களை விமர்சனத்தற்கு அப்பாற்பட்டவர்களாகக் கருதியதில்லை. மாறாக, ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்பதில் முன்னோடிகளாகவே இருந்திருக்கிறோம். - "PLOTE" தர்மலிங்கம் சித்தார்த்தன். — with Jude Nirushanth and 17 others.
இலங்கையின் வடக்கில் முக்கியமாக தமிழ் மக்கள் கால் நூற்றாண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக தமக்கான நிர்வாகம் ஒன்றை வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுள்ளனர். அந்த சந்தர்ப்பம் அவர்களுக்கு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி சனிக்கிழமை கிடைத்துள்ளது. இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் வடக்கு மாகாணத்திற்கான சபை மாத்திரமே இயங்காமல் இருந்து வந்தது. பலமான நிலையில் இருக்கும் தமிழ்த் தேசிய அணியொன்று இந்த தேர்தலில் வெல்லும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.