முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷரந்தி ராஜபக்சவின் சிரிலிய சவிய கணக்கு விபரங்கள் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் வங்கியின் சுதுவெல்ல கிளையில் இயக்கப்பட்டு வந்த சிரிலிய சவிய கணக்கு தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்து விபரங்கள் கோரப்படும் என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத் குமார தெரிவித்துள்ளார்.
ஷிராந்தி ராஜபக்சவின் கீழ் இயங்கி வந்த வங்கிக் கணக்கின் தேசிய அடையாள அட்டை இலக்கங்கள் போலியானதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த விசாரணைகள் குறித்து ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத் குமாரவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாகவும் இது குறித்து விளக்கமளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் குறித்து குற்ற விசாரணைப் பிரிவினரிடம் கேள்வி எழுப்பியதாகவும் உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எஸ்.ராஜபக்ச பெயரிலான அடையாள அட்டை இலக்கம் 222222222V மற்றும் ஏ.எம்.ஜே.ஏ. குமாரி பெயரிலான அடையாள அட்டை இலக்கம் 111111111V என்பவை போலியானதெனவும் அவர் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.