புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2015

விக்னேஷ் சிவன் உடன் மாலத்தீவுக்கு ஜாலிட்ரிப் சென்ற நயன்தாரா. காதல் வயப்பட்டார்.




தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கும் தற்போது இளம் இயக்குநர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

நயன்தாரா, ஏற்கனவே இரண்டு முறை காதலில் தோல்வி அடைந்தார். முதலாவதாக சிம்புடன் காதல் வயப்பட்டார். இருவரும் நெருங்கி பழகினார்கள். காதலை வெளிப்படையாகவும் அறிவித்தனர். ஆனால் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.

அதனை தொடர்ந்து பிரபு தேவா, நயன் தாரா ஆகிய இருவரும் காதல் ஜோடிகளாக வலம் வந்தனர்.  இதனால் பிரபு தேவா அவரது மனைவி ரமலத்திடமிருந்து விவாகரத்து பெற்றார்.  இதையடுத்து நயன்தாராவை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டார்.  இதற்காக படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட நயன்தாரா, கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார். இருவரும்  கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். இந்நிலையில் பிரபுதேவா போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.

மனைவியை பிரிந்த பின் தனது குழந்தைகளிடம் மேலும் அதிகம் பாசம் காட்ட தொடங்கிய பிரபுதேவா அவர்களை அவ்வப்போது வெளிநாடுக்கு அழைத்து சென்று வந்தார். பிரபுதேவாவின் இந்த மன  மாற்றம் நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் திருமண தேதியை விரைவில் முடிவு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினாராம். நயன்தாராவின் வற்புறுத்தலுக்கு பதில் சொல்லாமல் பிரபுதேவா காலம் கடத்தினார். இதனால் மனஸ்தாபம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலை முறித்துக்கொள்ள முடிவு செய்து பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவை வைத்து போடா போடி படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிக்கும் போது நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே நெருக்கம் அதிகமாகிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனால் இருவரும் காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா சமீபத்தில் தன் புதிய காதலருக்கு விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, சமீபத்தில் ரகசியமாக விக்னேஷ் சிவன் உடன் மாலத்தீவுக்கு ஜாலிட்ரிப் சென்று வந்திருக்கிறார் நயன்தாரா. நயன்தாராவுக்கு இந்தக்காதலாவது கல்யாணத்தில் முடியுமா? அதற்கு நிறைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ad

ad