இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை செய்யாமல், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மட்டும் விசாரணை செய்யும்படி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அல்ஹுசைன் இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் நடத்திய சந்திப்புகளின் போதே இந்த ஆலோசனையை வழங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள், அரசியல்தீர்வு விடயம் குறித்தும் ஜனாதிபதி, பிரதமர் இருவருடன் நடத்திய கலந்துரையாடலில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கவனம் செலுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.