புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2016

கங்கை நதியில் மாயமானாரா வேந்தர் மூவிஸ் மதன்?படகுகள் மூலம் தேடுதல் தீவிரம்

 'காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான வேந்தர் மூவிஸ்
சினிமா நிறுவன அதிபர் எஸ். மதனை, போலீசார் மற்றும் உறவினர்கள் தீவிரமாக கங்கை நதியில் தேடி வருகிறார்கள். இதற்கென 5 படகுகள் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்று(ஞாயிறு) வேந்தர் மூவிஸ் மதன் எழுதியதாகக் கூறப்பட்ட  கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ் அப்பில் பரவி தமிழ் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதில் மதன், தனக்கு மிகப்பெரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது என்றும் அவற்றை எல்லாம் ஐ.ஜே.கே. நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தீர்த்து வைக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
ந்தக் கடிதத்தை வேந்தர் மூவிஸ் மதன்தான் எழுதினாரா? உண்மையில் அது அவரின் 'லட்டர்பேடு' தானா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மதன் தனது குடும்பத்தாரோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் பதற்றமான மதனின் குடும்பத்தினர் மற்றும் அவரின் நெருங்கிய நண்பர்கள் வாரணாசி சென்றுள்ளனர். அங்கு அவர்கள் மதனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இது குறித்து வாரணாசி சென்றுள்ள சினிமா தயாரிப்பாளர் சிவாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.

அப்போது அவர் கூறுகையில், "மதன் தங்கியிருந்த ஹோட்டலைக் கண்டுபிடித்துவிட்டோம்.அங்கு அவர் அறையைக் காலி செய்யவில்லை. அவரின் பேக் மற்றும் உடைமைகள் அறையிலேயே உள்ளன. மதனைத் தொடர்புகொள்ள முயற்சித்தோம்.ஆனால் முடியவில்லை.இதனால் பதற்றமான நாங்கள் உள்ளூர் நபர்கள் மற்றும் போலீசாரின்  உதவியோடு, 5 படகுகள் அமைத்து கங்கை நதியில் தேடிவருகிறோம். மேலும்,வாரணாசிக்கு  மதன் அடிக்கடி வரும் பழக்கம் உடையவர்.அதனால் அவருக்கு இங்குப் பழக்கம் உள்ள நண்பர்கள் மூலமும் தேடி வருகிறோம். சினிமாக்களுக்கு உதவும் லொகேஷன் மேனேஜர்கள் மூலமும் மதனைத்  தேடிவருகிறோம்" என்றார்.

ad

ad