சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சென்னை நோக்கிப் பயணிப்பதற்கு முற்பட்டபோதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.24 வயதுடைய இளைஞன் ஒருவரே வெளிநாட்டு நாணயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்செய்யப்பட்டதை அடுத்து சந்தேகநபரை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது