புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2016

யாழில் போதைப்பொருள் கட்டுப்பாடு,விபத்துக்களை தடுப்பது தொடர்பில் சிவில் பாதுகாப்பு கூட்டத்தில் ஆராய்வு

யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு  கூட்டத்தில், யாழ். மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் பாவனைகளை கட்டுப்படுத்துவது மற்றும் வீதி விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.

தீர்வு காணப்படாமலுள்ள பல்வேறு குற்றச்செயல்களை விரைவுபடுத்தி அவற்றிற்கான தீர்வுகளை காண்பது தொடர்பிலும் சட்டம் ஒழுங்கை முழுமையான முறையில் மாவட்டத்தில் நிலை நாட்ட ஏதுவான சூழலை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்ப ட்டது
மாவட்ட சிவில் கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜெயசுந்தர, வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன்,  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் மற்றும் மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிவில் அமைப்புகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ad

ad