வவுனியா, பச்சன்குளம் பகுதியில் உள்ள மிருகங்கள் வளர்க்கும் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மிருகங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாலை இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தீ விபத்தினால் சுமார் 8 ஏக்கர் பண்ணை தீயினால் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.