புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூன், 2019

தடுப்பிலுள்ளோரை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்த உறவுகள்!

தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களைப் பார்வையிடுவதற்கு அவர்களது உறவினர்கள் பலர் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக நேற்று நீண்ட நேரம் காத்திருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 2 1ஆம் திகதி இலங்கை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல முஸ்லிம்கள் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

77 சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பிலும், 25 சந்தேகநபர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பொறுப்பிலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்வையிடுவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அருகில் அவரது உறவினர்கள் பலர் நேற்று நீண்ட நேரம் காத்திருந்தனர்.

ஒவ்வொரு உறவினர்களாக உள்ளே அனுமதித்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது

ad

ad