யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பில் நேற்று (14) ஆளுநர் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போது (B-437) வல்லை - அராலி வீதியின் அச்சுவேலி - வசாவிளான் - தெல்லிப்பளை வரையான வீதியின் இரு மருங்கிலும் கண்ணிவெடி
அபாயம் இருப்பதால் வீதியின் ஊடான பஸ் போக்குவரத்துக்கு அனுமதிப்பதென படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
எனினும் எப்போது திறக்கப்படும் என கூறப்படவில்லை. பலாலி விமான நிலையத்திற்கு மக்கள் சென்று வர இவ்வீதி அவசியமாகும் என்பதுடன். தற்போது அச்சுவேலியில் இருந்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு வர வேண்டுமாயின் பல கிலோ மீற்றர் சுற்றியே வர வேண்டியுள்ளது. இந்து வீதியை திறந்து விடுமாறு பலதரப்பட்டவர்களாலும் கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது