இன்று காலை, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் துப்பரவு பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் வேழமாலிகிதன் உள்ளிட்ட பலரால் இந்த பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, அவ்விடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், சகாதார நடைமுறையினை பின்பற்றாது செயற்படுவதாகவும் துப்பரவு பணிக்கு அனுமதி வழங்கியது யார் எனவும் வினவியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஏனையோரிடமும் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர். |