புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2020

Jaffna Editorகோப்பாய் மாவீர் துயிலும் இல்லத்தில் சிறீலங்கா காவல்துறையினர் வருகையால் முறுகல் நிலை!

யாழ்ப்பாணம்–கோப்பாய் மாவீர் துயிலும் இல்லத்தில் இன்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் 

சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது சற்று முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நினைவேந்தல் நிகழ்வுகள் துயிலும் இல்லத்திற்கு முன்பாக  உள்ள பகுதியில் சில வருடங்களாக இடம்பெற்று வருகின்றது.

எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவு கூறப்படவுள்ள நிலையில் குறித்த பகுதியில் இன்றையதினம் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.சிரமதான பணிகள் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த பகுதிக்கு  காவல் துறையினர் வருகை தந்ததை அடுத்து சற்று முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் திரும்பி சென்றதை அடுத்து சிரமதானப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருதமை குறிப்பிடத்தக்கது

ad

ad