புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2020

லண்டனில் 2 பிள்ளை படுகொலை செய்த யாழ் தமிழனுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!

www.pungudutivuswiss.com

லண்டனில் தனது இரண்டு குழந்தைகளையும் படுகொலை செய்த இலங்கையர், காலவரையறையின்றி வைத்தியசாலையில்

தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடராஜா நித்தியகுமார் கடந்த ஏப்ரல் 26ம் திகதி கிழக்கு லண்டனின் Ilford பகுதியில்
தனது பிள்ளைகளான 19 மாதங்களான பவின்யா நித்தியகுமார் மற்றும் மூன்று வயதுடைய நிஜிஷ் நித்தியகுமார் ஆகியோரை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

41 வயதான நித்தியகுமார் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள, இந்நிலையில், ஓல்ட் பெய்லியில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து அவரை காலவரையறையின்றி வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குழந்தைகளின் தாய், இந்த சம்பவத்தின் போது குளித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ad

ad