புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2020

சித்ரா கவரை எடுக்க சொன்னதா? குளிக்கனுமென்று சொன்னதா? முரண்பட்ட தகவலால் சிக்கினார் ஹேம்நாத்

www.pungudutivuswiss.com

விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29).

இவர் கடந்த புதன்கிழமை அதிகாலை 02.30 மணிக்கு, ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் கடந்த செவ்வாய்கிழமை படபிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ள நிலையில் ,சித்ரா அறையிலுள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தந்தை அளித்த புகாரில் சம்பவத்தன்று இரவு தனது மனைவியிடம் சித்ரா பேசியதாகவும் அதன் பிறகு அதிகாலையில் தனது சம்பந்தி ரவிச்சந்திரன் தனக்கு போன் செய்தபோது தான் தூங்கியதால் எடுக்கவில்லை.

அதன்பிறகு பேசியபோது ஹோட்டலில் சித்ரா தூக்கு போட்டு இறந்துவிட்டதாகவும், ஷூட்டிங் முடித்துவிட்டு வந்தவர் காரில் உள்ள கவரை எடுத்து வருமாறு ஹேம்நாத்திடம் கூறியதாகவும் வெளியே வந்து கவரை எடுத்து விட்டு வந்தபோது கதவை சாத்திக் கொண்டார் நடிகை சித்ரா என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர், கதவை திறந்து பார்த்தபோது சித்ரா இறந்து போனதாக அந்த முதல் தகவல் அறிக்கையில் பதிவாகி உள்ளது. முதலில் குளித்துவிட்டு உடை மாற்ற வேண்டும் எனக்கூறி தன்னை வெளியே செல்லுமாறு சித்ரா கூறியதாக ஹேம்நாத் பொலிசாரிடம் கூறி வந்த நிலையில் சித்ராவின் தந்தை அளித்த புகாரில் பதியப்பட்டுள்ள முரண்பட்ட தகவலால் பொலிசார் குழப்பம் அடைந்து விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சித்ராவின் மரணம் தற்கொலைதான் என மருத்துவர்கள் தெரிவித்தாலும் பொலிஸ் நிலையத்தில் இருந்து இன்னும் ஹேம்நாத்தை அனுப்பாமல் பொலிசார் தங்களது விசாரணை வளையத்திற்கு உள்ளேயே வைத்திருப்பதாக தெரியவருகிறது.

ad

ad