சுவிட்சர்லாந்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4455 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை மொத்தம் நாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து சுவிட்சர்லாந்து சுகாதாரத் துறை அமைச்சர் எலைன் பெர்சட் கூறுகையில், சுவிட்சர்லாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மோசமான நிலையை அடைந்துள்ளது. நாம் கொரோனாவின் முன்றாம் அலையை அனுமதிக்க கூடாது. எனவே கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உருவாக்கப்படும் மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்தன.
இருப்பினும், உலகின் முதல் நாடாக, பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனாவுக்கான் தடுப்பு மருந்து 50 சதவீதம் பலன் அளித்தாலே சாதகமான விஷயம் என்று கூறப்பட்டுவந்த நிலையில், பைசர் உருவாக்கிய தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் அளித்திருப்பது உலகளாவிய மருத்துவக் குழுவினர்களுக்கு நம்பிக்கை வழங்கியுள்ளது.
லண்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தலைமையில் கண்டுபிடிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.