புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2021

ஸ்வர்ணமஹால் விழுங்கப்பட்டது?

www.pungudutivuswiss.com
அனைத்தையும் விழுங்கிவிடும் கோத்தா அரசின் உத்தியின் கீழ் ஸ்வர்ணமஹால் ஜுவலர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் ஜீவக எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவின் பணிப்புரைக்கமைய குறித்த மூவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

13.7 பில்லியன் ரூபா பெறுமதியான வைப்புகளை சட்ட விரோதமாக ஏற்றுக் கொண்டமை, முறைகேடு மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த நிறுவன முன்னாள் பணிப்பாளர்கள் மீது குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

ad

ad