புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2021

அனைத்து பாரம்பரியங்களையும் புறக்கணித்து விட்டு ரஸ்ய தூதரகத்திற்கு நேரில் சென்று உதவிகோரினார் வெளிவிவகார செயலாளர் – சண்டேடைம்ஸ்

www.pungudutivuswiss.com
அனைத்து பாரம்பரியங்களையும் புறக்கணித்து விட்டு ரஸ்ய தூதரகத்திற்கு நேரில் சென்று உதவிகோரினார் வெளிவிவகார செயலாளர் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளதாவது
கடந்த புதன்கிழமை வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே அனைத்து பாராம்பரியங்களையும் புறக்கணித்துவிட்டு பௌத்தலோக மாவத்தையிலுள்ள நன்கு பாதுகாக்கப்பட்ட ரஸ்ய தூதுரகத்திற்கு சென்றார்.
அவருடன் வெளிவிவகார அமைச்சின் இன்னொரு அதிகாரியும் சென்றிருந்தார்.
இவர்கள் இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் யூரி மட்டேரியை சந்தித்தனர்.
முன்னயை சோவியத்யூனியனில் இடம்பெற்றிருந்த நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக செயற்படவேண்டும் என ரஸ்யா பரப்புரை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்வதே இந்த சந்திப்பின் நோக்கம்.
உதவியை கோருவதற்காக இலங்கையின் வெளிவிவகார செயலாளர் கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை இதுவே முதல்தடவை.
அவசரதேவைகளின் தேவைகளின் போது குறிப்பிட்ட இராஜதந்திரியை வெளிவிவகார அமைச்சிற்கு அழைப்பதே பாரம்பரியமாக இதுவரை காணப்படுகின்றது.
இலங்கைக்கு அவசரதேவையிருந்திருந்தால் வெளிவிவகார கொள்கை மற்றும் வெளிவிவகார உறவுகளிற்கு பொறுப்பான வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்ட நாட்டின் இராஜதந்திரிக்கு அவ்வாறான அழைப்பை விடுத்திருக்கவேண்டும்

ad

ad