புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2021

வாக்கெடுப்பு நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

www.pungudutivuswiss.com
இலங்கைக்கு எதிராக களமிறங்கிய பல நாடுகள்? ஜெனிவா நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட குழப்பம்! ஐ.நாவில் எடுக்கப்பட்ட திடீர் முடிவு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த வாக்கெடுப்பு நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் தற்பொழுது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து இன்றைய தினம் வாக்கெடுப்பு நடாத்தப்படவிருந்தது.
எனினும் நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட குழப்ப நிலைமைகளினால் இந்த வாக்கெடுப்பு நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக அதாவது இலங்கைக்கு எதிராக பல நாடுகள் வாக்களிக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக ஜெனிவா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் கிரமமாக்கப்பட வேண்டுமெனவும், மனித உரிமை நிலைமைகள் கண்காணிக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad